1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Remdesivir tablet distribution in Nehru stadium

இன்று முதல் நேரு உள்விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை!

Chennai
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்க உள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் அதை வாங்க மக்கள் பெருமளவில் வருவதால் கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைத்து விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் நேரு உள் விளையாட்டு அரங்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் அங்கு மருந்து விற்பனை நடக்கும் என சொல்லப்பட்டுள்ள நிலையில் தினமும் 300 பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் யாரையும் மக்கள் தொடர்பு கொண்டு ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
கொடூர கொரோனா: விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் பலி!