1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ranipet engineer house raided

நகராட்சி பொறியாளர் வீட்டில் சிக்கிய 193 சவரன் நகை: அதிர்ச்சி தகவல்!

ராணிப்பேட்டை
நகராட்சி பொறியாளர் வீட்டில் சிக்கிய 193 சவரன் நகை: அதிர்ச்சி தகவல்!
ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் நேற்று முதல் நடந்த சோதனையில் இதுவரை 193 சவரன் நகைகள், இருபத்தி மூன்று லட்சம் ரொக்கம் மற்றும் காசோலைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் என்பவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்த நிலையில் சென்னை மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை முதல் திடீரென அதிரடி சோதனை செய்தனர் 
 
இந்த சோதனையில் கணக்கில் வராத கட்டுக்கட்டாய் பணம், தங்கம் வெள்ளி நகைகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஒரு சூயிங்கம் போட்டா கொரோனா காலி..! – அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!