1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rajinikanth gets trolled in twitter

பயந்துட்டியா_கொமாரு: மருமகன் டயலாக் மாமனாருக்கு..!! தம்பிகள் அட்ராசிட்டி!

ரஜினிகாந்த்
சமுக வலைத்தளமான டிவிட்டரில் #பயந்துட்டியா_கொமாரு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
 
தான் கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்திருந்த ரஜினி, படங்களில் நடித்தவாறே அரசியல் செயல்பாடுகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்திய ரஜினி, நிர்வாகிகளால் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் அடைந்து விட்டதாக தெரிவித்தார். அதை பிறகு சொல்வதாக கூறியிருந்தார்.   
 
இந்நிலையில் இன்று லீலா பேலஸில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். கடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனது ஏமாற்றம் என்ன தற்போது தனது அரசியலுக்கு அவர் வைத்துள்ள திட்டம் என்னவென விளக்கம் அளித்தார். இதனோடு தனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை எனவும் கூறினார்.  
 
இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, முதலமைச்சர் பதவி மீது எனக்கு ஒரு போதும் ஆசை வந்தது இல்லை. கடந்த 1996 ஆம் ஆண்டு பிரதமர் உள்ளிட்டோர் இரண்டு முறை அழைத்து கேட்டும் முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று கூறிவிட்டேன்.  
 
முதலமைச்சர் பதவி மீது எனக்கு எப்போதும் எண்ணம் ஏற்பட்டது இல்லை. இளைஞனாக, படித்தவனாக, தொலைநோக்கு பார்வை உள்ளவனாக இருப்பவனை முதலமைச்சராக உட்கார வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என பேசினார். 
 
பேசுவதை எல்லாம் பேசிவிட்டு கடைசியாக மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி தெரிந்தபிறகு அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்நிலையில் சமுக வலைத்தளமான டிவிட்டரில் #பயந்துட்டியா_கொமாரு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
 
தமிழகத்தை தமிழர் தான் ஆள வேண்டும் என சீமான் கூறியதற்கு பயந்தே முதல்வர் பதவிக்கு ரஜினி ஆசைப்படவில்லை என பேசி வருகின்றனர். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
கேரளாவில் உச்சம்: இந்தியாவில் ஆட்டம் காட்டும் கொரோனா!!