தொடர்புடைய செய்திகள்
- சட்டசபை தேர்தலுக்கு தயாரான கமல்ஹாசன்...மக்களை சந்திக்க திட்டம் !
- “ஃபாசிச நாடாக இந்தியா மாறிவருகிறது” கனிமொழி குற்றச்சாட்டு
- அதிகமாக விற்பனையான பெரியார் புத்தகங்கள்: ரஜினி காரணமா?
- ஸ்டாலின் பதவிக்கு ஆப்பு? துரைமுருகனுக்கு கொம்பு சீவும் ஜெயகுமார்!
- நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது? ரஜினியை அசிங்கப்படுத்திய நாஞ்சில்!
பெரியார் குறித்து ரஜினிக்கு எதுவும் தெரியாது - துரைமுருகன்
சமீபத்தில் துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் செய்திகள் வெளியாகி வருகிறது. தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என ரஜினி மற்றொரு பேட்டியில் தெரிவித்தார்.
இதனால் ரஜினிக்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் ரஜினி வீட்டுக்கு எதிராக நேற்று பெரியார் ஆதரவாளர்கள் சிலர் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தின் மீது ஆவேசமாக பேசிய பெரியார் ஆதரவாளர்கள் சிலர், ‘ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் உயிரோடு நடமாட முடியாது என்றும் அவரது கையை வெட்டுவோம் என்றும் இந்த போராட்டம் இதோடு நிற்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் , திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளதாவது :
பெரியார் குறித்து ரஜினிக்கு எதுவும் தெரியாது. அதனால் ரஜினி பேசாமல் இருப்பதே நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
