1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (17:39 IST)

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் உள்ள 7  மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டல் அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகக் கடற்கரையை வந்தடையும் என்பதால் மார்ச் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை  தமிழ நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

எனவே  தமிழகத்தில் தஞ்சை,  நாலை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்  ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.