சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலுள்ள அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று பிற்பகல், ரயில் நிலையத்திலுள்ள அலுவலகக் கட்டடத்தின் முதல் மாடியில் திடீரென தீ பரவி எரியத் தொடங்கியது.
சம்பவத்தை அறிந்தவுடன், வேப்பேரி பகுதியில் உள்ள தீயணைப்பு படையினர் உடனடியாகச் சென்று தீயைக் கட்டுப்படுத்தினர். அதனால் எந்தவொரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. தொடக்கக்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், காவல்துறையினர் தீ விபத்தின் காரணங்களை பற்றி மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்வால் ரயில் நிலையத்தின் சிக்னல் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதால் சில ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Edited by Mahendran