1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (22:16 IST)

இயல்பு நிலைக்கு திரும்புகிறது கன்னியாகுமரி மாவட்டம்!

இயல்பு நிலைக்கு திரும்புகிறது கன்னியாகுமரி மாவட்டம்!
அந்தமான் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் தற்போது அம்மாவட்ட இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் படிப்படியாக மழை குறைந்து வருவதாகவும் வெள்ளமும் படிப்படியாக வடிந்து வருவதாகவும் மீட்பு நடவடிக்கையை துரிதமாக நடைபெற்று வருவதாக மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பொதுமக்களும் தற்போது வீட்டை விட்டு வெளியே வந்து தங்களுடைய அன்றாட வேலைகளை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது