1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai police arrested pr sundar in bangalore

செய்தி வாசிப்பாளருக்கு பாலியல் தொல்லை!.. பி.ஆர்.சுந்தர் கைது!...

pr sundar
பிரபல தொழிலதிபராகவும், பங்குச்சந்தை நிபுணராகவும் மக்களிடம் பிரபலமானவர் பி.ஆர்.சுந்தர். பங்குச்சந்தை தொடர்பாக பல ஊடகங்களில் இவர் பேசியிருக்கிறார். பங்கு சந்தை தொடர்பான பல விளம்பரங்களில் இவரின் முகத்தை நாம் பார்க்க முடியும்.

தினமும் காலை 9 மணிக்கு நான் ஒரு ஸ்டாக் சொல்வேன்.. அதை நீங்கள் வாங்கினால் உங்களுக்கு இத்தனை சதவீதம் லாபம் கிடைக்கும் என இவர் பேசும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் அடிக்கடி பார்க்க முடியும்.திமுக ஆதரவளான பி.ஆர் சுந்தர் தவெகவை தொடந்து விமர்சனம் செய்து வந்தார்..

இந்நிலையில்தான், செய்தி வாசிப்பாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பி.ஆர் சுந்தர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை, மிரட்டல் ஆகிய புகார்களில் பி.ஆர் சுந்தர் மற்றும் அவரது மனைவி மீது ஐஸ் ஹவுஸ் காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.. எனவே பி.ஆர் சுந்தர் தலைமறைவானார். தற்போது பெங்களூரில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
எல்.ஐ.சியின் ரூ.31,500 கோடி மதிப்பு பங்குகளை ரகசியமாக விற்பனை செய்ததா மத்திய அரசு?