1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rain in some places at chennai today

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

Rain
சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்து வருவதை எடுத்து சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்தது என்பதும் இதனால் மதிய நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டது என்பதும் தெரிந்தது.

ஆனால் கடந்த நான்கு நாட்களாக சென்னையில் திடீரென தட்பவெப்ப நிலை மாறி பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதை அடுத்து கோடை காலம், அக்னி நட்சத்திர காலம் என்பதே தெரியாமல் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, வடபழனி, எம்ஆர்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

மேலும் தேனாம்பேட்டை, அண்ணா சாலை, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளதால் சென்னையின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!