தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை: 19 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!
- கலைஞர் என்னை மன்மதராஜா எனக் கூறி அழைத்தார்-தனுஷ்
- ''மனிதன் ரிக்ஷாவை இழுக்கும் கைரிக்ஷாவை ஒழித்தவர் கலைஞர்''- சூர்யா
- பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்!’’ -முதல்வர் மு.க.ஸ்டாலின்
- கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு..! 300க்கும் மேற்பட்டோர் பலி..!! துயரத்தில் காங்கோ மக்கள்..!!!
சென்னையின் பல பகுதிகளில் பரவலான மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!
சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த சில மணி நேரங்களாக சென்னையில் உள்ள பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் என்று சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை மெரினா கடற்கரை, மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர், சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழையும் குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, தேனாம்பேட்டை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
அதேபோல் சென்னையில் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. காலை முதலே சென்னையில் மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Edited by Mahendran
