தொடர்புடைய செய்திகள்
- கவர்னர் மாளிகையில் விழுந்த மர்ம பொருள்!? – வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வு!
- டிசம்பர் 20,21 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- கான்க்ரீட், தார் சாலைகளுக்கு மாற்று சாலை: சென்னை மாநகராட்சி திட்டம்
- 2 நாள் சரிவுக்கு பின் மீண்டும் தங்கம் விலை உயர்வு: கிராம் ரூ.5050ஐ தாண்டியது!
- சென்னையில் விறுவிறுப்பாக நடக்கும் ‘சூர்யா 42’ படப்பிடிப்பு!
அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு!
இன்னும் 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மற்றும் வடமேற்கு பருவமழை, கீழ் அடுக்கு சுழற்சி உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக தமிழகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்த போது கனமழை பெய்தது என்பதும் இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்னும் 3 மணி நேரத்தில் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இன்று காலை சென்னையில் உள்ள ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
