தொடர்புடைய செய்திகள்
- #BREAKING முதல்வர் முக.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
- தேமுதிகவின் அறிக்கைக்கு செவிசாய்த்து ரூ.60க்கு தக்காளி விற்பனை- விஜயகாந்த்
- குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட விவகாரம்- டிடிவி தினகரன் டுவீட்
- அரசு மருத்துவமனைகள், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது ஏற்புடையதல்ல.- அண்ணாமலை
- தென் மேற்கு பருவ மழை: பேரிடர் கால மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தும் சாதனங்கள் கண்காட்சி
அடுத்த 3 மணி நேரத்தில், 16 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைகாலம் முடிவடைந்து தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் கேரளா ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யும் என்றும், இந்த மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்ற.
Edited by Siva
