ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 3 ஜூலை 2022 (14:34 IST)

ஆஸ்பத்திரியும் வீடுமாய்... விஜயகாந்த் குறித்து பிரேமலதா!

விஜயகாந்தை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று டாக்டர்களிடம் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டியது உள்ளது.

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் வீடு திரும்பி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தற்போது விஜயகாந்து உடல்நலம் சீராக இருப்பதாகவும் அவருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நீரிழிவு நோய் காரணமாக அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவரது சர்க்கரை அளவு சரியான அளவில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பிரேமலத கூறியுள்ளதாவது, விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மை தான். அவ்வப்போது ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று டாக்டர்களிடம் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டியது உள்ளது. இருப்பினும் விரைவில் அவர் பழைய நிலைக்கு திருப்புவார் என்கிற நம்பிக்கை உள்ளது. அவரது உடல்நிலையை பெரிதுபடுத்த வேண்டாம். எங்கள் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.