தொடர்புடைய செய்திகள்
- ஆண்டாள் கோவிலில் குவிந்த பக்தர்கள் – போலி செய்தியால் பரபரப்பு
- மதுரையில் உச்சம் தொடும் கொரோனா! – ஒரே நாளில் 320 பேர் பாதிப்பு!
- 25 ஆயிரத்தை நெருங்கும் பலிகள்; 9.68 லட்சம் பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!
- 12வது தேர்வு ரிசல்ட்; வழக்கம்போல பெண்கள் அதிக தேர்ச்சி! - திருப்பூர் முதலிடம்!
- இப்படியே போனால் நோட்டாவை கூட தாண்ட முடியாது! – மு.க.ஸ்டாலின் கண்டனம்!
பூந்தமல்லி துணிக்கடையில் 50 ஊழியர்களுக்கு கொரோனா! - சென்னையில் அதிர்ச்சி
சென்னை பூந்தமல்லியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரியும் 50 ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 70 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. சமீப காலமாக முழு முடக்கம், கடுமையான கட்டுபாடுகள் முதலானவற்றை சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்ததன் விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக தெரிய வந்துள்ளது. சுமார் 100 ஊழியர்கள் பணிபுரியும் அந்த துணிக்கடையில் உள்ள 60 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 50 பேருக்கு கொரோன உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், துணிக்கடையும் அதிகாரிகள் மூடியுள்ளனர்.
