தொடர்புடைய செய்திகள்
- ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் புகார்
- சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா... : ஓபிஎஸ்-க்கு பாடல் மூலம் பதிலளித்த ஜெயக்குமார்
- அமமுக.,வின் தொழிற்சங்க பேரவையின் கொடியை அறிமுகம் செய்த டிடிவி.தினகரன்
- நாங்க ஆட்சிக்கு வரும்போது நல்லா மாட்டுவீங்க..! – அரசு அதிகாரிகளுக்கு விஜயபாஸ்கர் வார்னிங்!
- இந்துமதம் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராஜா மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்
ஆ.ராசா குறித்த கேள்வி.. கடுப்பான அமைச்சர் பொன்முடி
ஆ ராசா குறித்து எந்த கேள்வி கேட்டாலும் திமுக பிரமுகர்கள் பதில் சொல்ல மறுத்து வருவது கடந்த இரண்டு நாட்களாக வழக்கமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சமீபத்தில் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆ ராசா பேசியது இந்து மத மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று இது குறித்த கேள்வி ஒன்றை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களிடம் செய்தியாளர்கள் பேசியபோது அந்த கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் தவிர்த்தார். உடன் இருந்த திமுக எம்பி தயாநிதி மாறனும் இந்த கேள்விக்கு எந்த பதிலும் சொல்லவில்லை
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை அமைச்சர் பொன்முடி சந்தித்த போது ஆ ராசா குறித்த கேள்வியை கேட்ட போது வேறு கேள்வியே இல்லையா என அவர் கடுப்பானார். இதனால் பத்திரிகையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆ ராசாவுக்கு திமுக தரப்பில் எந்த விதமான ஆதரவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
