வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (12:20 IST)

இந்துமதம் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராஜா மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்

A Raja
சமீபத்தில் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்பி ராசா கூறிய நிலையில் அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன
 
இந்த நிலையில் ஆ ராசாவின் இந்துமத அவதூறு பேச்சுக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
இந்து மதம் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார் 
 
இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற. ஆ ராசாவின் இந்துமத சர்ச்சைக்குரிய பேச்சு திமுகவினர் ஆதரிக்கவில்லை என்பது அவர்கள் மௌனமாக இருப்பதில் இருந்து தெரியவருகிறது.