வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (19:07 IST)

2,500 எல்லோரையும் போய் சேரனும்: அவகாசத்தை நீட்டித்த ஈபிஎஸ்!

பொங்கல் பரிசு தொகுப்பை பெற அவகாசம் நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு பொங்கல் பையும், பணமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் பொங்கல் பை வழங்கப்பட்டு அதனுடன் ரூ.2,500 ரொக்கமும் வழங்கப்பட்டது. 
 
இந்நிலையில் ஜன.13 ஆம் தேதி வரை கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற அவகாசம் நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, ஜன. 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.