தொடர்புடைய செய்திகள்
- நீண்ட இடைவெளிக்கு பின் 900க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!
- குரூப் 1 தேர்வில் ‘பரியேரும் பெருமாள்’ – படம் பார்க்காதவர்கள் பதில் அளிப்பதில் சிக்கல்!
- "உயிர்த்தெழுவார்" என்று நம்பி சடலத்தை 22 நாட்கள் வைத்திருந்தவர்கள் கைது
- தமிழகத்தில் இரண்டு கட்ட தேர்தல்? – தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன?
- போதை ஏறி.. புத்தி மாறி.. தன் வீட்டுக்கே தீ வைத்த காவலர்!
ரேசன் கடைக்கு வரவும்.. பொங்கல் பரிசு காத்திருக்கிறது! – மக்கள் மகிழ்ச்சி!
தமிழக அரசு அறிவித்த பொங்கல் பை மற்றும் பணம் இன்று முதல் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பையும், பணமும் வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆண்டு வரை பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அறிவித்தபடி இன்று முதல் நியாய விலைக்கடைகளில் பொங்கல் பையும், பணமும் வழங்கப்படுகிறது. முன்னதாக டோக்கன் அளித்த நேரம், தேதிக்கு சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பை வழங்கும் நிகழ்வை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மன்னார்குடியில் பொங்கல் பை வழங்கி தொடங்கி வைத்தார்.
அடுத்த கட்டுரையில்
