1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pongal gift in ration shops from Jan 3rd

ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு!

பொங்கல் பரிசு
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை பரிசாக கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. 

 
இந்த தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிபருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகை பொருட்கள் அளிக்கப்படுக்கிறது. 
 
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வருகிற 2022ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். 
About Writer
Sugapriya Prakash