தொடர்புடைய செய்திகள்
- உங்கள கும்புட்டு கேக்குறேன்; முகக்கவசம் மாட்டுங்க! – அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்!
- நீட் தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு! அமைச்சரவை ஒப்புதல்!
- 3.43 லட்சம் பாதிப்பு, 10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை: இந்தியா கொரோனா நிலவரம்
- மக்கள் மாஸ்க் அணிவதில்லை’…அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்தினால் …. – ராமதாஸ் டுவீட்
- கணவரைப் பிரிந்த பெண்ணுடன் வாழ்ந்த நபரை கொன்ற கணவன் !
மது போதையில் பெண் போலீஸிடம் தகராறு! – திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்குப்பதிவு!
புதுக்கோட்டை அருகே பொன்னமராவதியில் பெண் காவலரிடம் குடித்துவிட்டு தகராறு செய்த திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வளையம்பட்டி ஐந்தாம் ரோட்டில் காவலர்கள் வாகன பரிசோதனை பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக பொன்னமராவதி திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி காரில் வந்துள்ளார். அவரது காரையும் காவலர்கள் சோதனையிட முயன்றபோது அதை அவர் தடுத்ததுடன் பெண் காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரியை தகாத வார்த்தைகளில் திட்டி தகராறு செய்துள்ளார். மேலும் அவர் மது அருந்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, மதுபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
