தொடர்புடைய செய்திகள்
- பிரதமர் மோடி வெளியிட்ட ரூ.75 நாணயம்.. புகைப்படம் வைரல்
- என்.சி.சி பொதுக்கூட்டம்: ரூ.75 நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைத்த ஓபிஎஸ்
- இதை மோடியால் தாங்கி கொள்ள முடியுமா? சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
- சர்ச்சைக்குரிய ஆவணப்படம் திரையிடவில்லை! – சென்னை பல்கலைக்கழகம்!
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டம்: ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு!
பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்திற்கு ஓ பன்னீர்செல்வம் மகன் ஒபி ரவீந்திரநாத் எம்பி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக மக்களவை எம்பி என்று குறிப்பிட்டு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அதிமுக எம்பி ஆக ரவீந்திரநாத்தை கருதக்கூடாது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கோரிக்கை கடிதம் அனுப்பியது.
இந்த நிலையில் இன்றைய அழைப்பு கூட்டத்துக்கு அதிமுக எம்பி என ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலான அதிமுக மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
