1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Perambalur auto driver rescues a monkey

குரங்கிற்கு முதலுதவி செய்து காப்பாற்றிய ஓட்டுனர்! – வைரலாகும் வீடியோ!

Tamilnadu
பெரம்பலூரில் சாலையில் அடிபட்டு சாக கிடந்த குரங்கை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெரம்பலூரை சேர்ந்த பிரபு என்ற நபர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல அவர் சவாரிக்கு சென்று கொண்டிருந்தபோது அந்த சாலையில் குரங்கு ஒன்று வாகனம் மோதியதால் அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளது.

உடனடியாக ஓடி சென்று அந்த குரங்கிற்கு முதலுதவிகள் செய்த பிரபு அந்த குரங்கை உயிருடன் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தை அப்பகுதி வழியாக சென்ற சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். உயிர்களிடம் கருணை காட்டும் ஆட்டோ டிரைவரின் மேன்மையை பாராட்டி பலரும் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick