1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Peoples demand to open temples for Vijayathasami

விஜயதசமிக்காவது கோவிலை திறக்க வேண்டும்! – உயர்நீதிமன்றத்தில் மனு!

Tamilnadu
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் கோவில்கள் மூடப்படும் நிலையில் விஜயதசமிக்கு கோவிலை திறக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளன. எனினும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாரம் முழுவதும் கோவில்களை திறக்க பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் 15ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் விஜயதசமி அன்று கோவில்களை திறக்க அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
அடுத்த கட்டுரையில்
60,000 புள்ளிகளை ஈஸியாய் தொடும் சென்செக்ஸ்!!