1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (16:16 IST)

திருச்சி, சூரியூர் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு

jallikattu
தமிழகத்தில் பாலமேடு அலங்காநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வரும் நிலையில் திருச்சி சூரியூர் என்ற பகுதிகளும் என்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது 
 
700க்கும் மேற்பட்ட காளைகளை வீரர்கள் அடக்கினார்கள் என்பதும் இதன் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கும் ஆர்வத்தில் பலர் களத்திலேயே நின்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த் என்பவரை மாடு முட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சையின் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து காவல்துறையினர் களத்தில் இருக்கும் பார்வையாளர்களை அப்புறப்படுத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
Edited by Mahendran