1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. old man filed case against on her three sons

தந்தையை கைவிட்ட மகன்களுக்கு சிறை, அபராதம்!.. 84 வயசில் கேஸ் போட்டு தீர்ப்பு வாங்கிய தாத்தா!..

father
வேகமாக ஓடும் வாழ்க்கையில் உறவுகளுக்கு இடையே உள்ள முக்கியத்துவமும், மகத்துவம் கூட பலருக்கும் இல்லாமல் போய்விட்டது. குறிப்பாக பெரியவர்கள் மீது காட்டப்படும் அன்பும் மரியாதையும் வெகுவாகவே குறைந்துவிட்டது. 70,80களில் பிறந்தவர்கள் கூட இப்போதெல்லாம் வயதான தனது தந்தை தாயை பராமரிப்பதில் விருப்பம் இல்லாமல் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது, தெருவில் விட்டு விடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. 
 
இந்நிலையில்தான், காரைக்காலில் முனுசாமி (84) என்கிற முதியவர் ஆறு ஆண்டுகளாக ஆதரவின்றி வறுமையோடு போராடி வரும் நிலையில் தனது மூன்று மகன்களிடமும் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்./ அந்த வழக்கை விசாரித்த காரைக்கால் நீதிமன்றம் அவரின் மூன்று மகன்களும் அவரின் தந்தைக்கு மாதம் தலா 2 ஆயிரம் வழங்க வேண்டும், தவறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்தது..
 
ஆனால் தனது தந்தைக்கு மாதம் 2 ஆயிரம் கொடுக்க விருப்பம் இல்லாத அந்த மூன்று மகன்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அங்கும் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது. இதையடுத்து அந்த முதியவர் மீண்டும் வழக்கு தொடர்ந்ததால் மூன்று மகன்களுக்கும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர் கேட்ட தொகையை கொடுக்காவிட்டால் சிறை தண்டனை தொடரும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்
அமலாக்கத்துறையால் தேடப்படும் ஜான் பிரிட்டோ ஆதவ் அர்ஜூனா குடும்பத்தை சேர்ந்தவரா? ஒரு விளக்கம்...!