1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nilgris Collector orders Corona certificate necessary

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா; சான்றிதழ் கட்டாயம்! – நீலகிரி ஆட்சியர் கறார்!

Tamilnadu
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் கேராளாவிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனாவால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து கொரோனா தடுப்பூசி, கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக வேகமாக குறைந்து வந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துள்ள நிலையில் கேரளாவில் இருந்து நீலகிரி வருவோர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என நீலகிரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
About Writer
Prasanth Karthick