தொடர்புடைய செய்திகள்
- உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்! – குடியரசு தலைவர் திறந்து வைத்தார்!
- தினம் ஒரு புத்தக பரிந்துரை.. எல்லாம் லைவ் வாங்க! – கமல்ஹாசன் அழைப்பு!
- கப்பல் லேட் ஆச்சுனா.. குதிரை வண்டில கொண்டு வாங்களேன்! – எல்.முருகனை கலாய்த்த காங்கிரஸ் தலைவர்!
- ஒன்றிணைவோம் உடன்பிறப்புகளே! – சசிக்கலாவை சந்தித்த சரத்குமார்!
- ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுக – அமமுக மோதல்!
புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி! – மத்திய அமைச்சரவை முடிவு!
புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சி பெரும்பான்மை இழந்த நிலையில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற நிலையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் அரசு பெரும்பான்மை இழந்தது. பெரும்பான்மை நிரூபிக்க இயலாததால் புதுச்சேரி அமைச்சரவை கலைக்கப்பட்டது.
இந்நிலையில் பதவியேற்க எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவை மறுத்துவிட்டதால் ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வலியுறுத்தினார். இதுதொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமைப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
