1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. National GreenTribunal statement about sterlite issue

ஸ்டெர்லைட் வழக்கு: பசுமைத்தீர்ப்பாயம் அதிர்ச்சி அறிக்கை

பசுமை தீர்ப்பாயம்
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையின் நிர்வாகம் பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரந்தது. இந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் இன்று முக்கிய அறிக்கையை வெளியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த அறிக்கை வெளியானது

இந்த அறிக்கையில்  ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது இயற்கைக்கு முரணானது என்றும் முறையாக நோட்டீஸ் அனுப்பிய பின்னரே முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா குழு பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் என்றும் பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி பசுமைத்தீர்ப்பாயத்தின் இந்த அறிக்கை தூத்துகுடி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
அடுத்த கட்டுரையில்
குடிபோதையில் பிரசவம் பார்த்த டாக்டர்: தாயும் சேயும் பரிதாபமாய் உயிரிழந்த சோகம்