தொடர்புடைய செய்திகள்
- மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி- தேர்தல் ஆணையர் தகவல்
- ஜப்பானிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் கைது
- 2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்- முதல்வர் முக.ஸ்டாலின்
- லாலு பிரசாத் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை
- ஸ்மார்ட்போன் வாங்கினால் பீர் இலவசம்; கடையில் குவிந்த கூட்டம்! – சீல் வைத்த அதிகாரிகள்!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: நந்தனம் கல்லூரி முதல்வர் கைது..!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நந்தனம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கல்லூரியின் முதல்வர் கைது செய்யப்பட்ட தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி கல்லூரிகளில் அவ்வப்போது ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து வருவது குறித்த செய்திகளும் அவர்கள் கைது செய்யப்பட்ட செய்திகளையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் குறித்து சைதாப்பேட்டை மகளிர் போலீசார் விசாரணை செய்த நிலையில் உடற்பயிற்சி கூடத்தில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அந்த கல்லூரியின் முதல்வர் அத்துமீறியது தெரியவந்தது.
இதனை அடுத்து கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதன் பிறகு நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
