தொடர்புடைய செய்திகள்
- தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: 16 தங்கப்பதக்கங்கள் வென்ற மாணவர்கள்
- கழிவறையை சுத்தம் செய்த பள்ளி மாணவர்கள்! வீடியோ வெளியானதால் பரபரப்பு!
- சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை நிலைகல்விக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
- பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி...
- 19 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு: உடனடியாக மூடப்பட்ட பள்ளி!
பெயர்ப்பட்டியலில் திருத்தம்? பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பிளஸ் ஒன் பொது தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டுமானால் அதற்கு கால அவகாசம் அளித்து அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த கல்வி ஆண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் இருந்தால் அதை பிப்ரவரி 3 முதல் 10ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 3 முதல் 10ம் தேதி வரை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கூறி திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்கள் உடனடியாக இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
