வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 25 ஜனவரி 2023 (07:57 IST)

19 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு: உடனடியாக மூடப்பட்ட பள்ளி!

virus
கேரள மாநிலத்தில் எர்ணாகுளத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 19 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து அந்த பள்ளி உடனடியாக மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாடு என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் அவர்களில் சிலருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து அந்த மாணவ மாணவிகளை பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மற்ற மாணவர்களுக்கும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க உடனடியாக பள்ளி மூடப்பட்டதாகவும் பள்ளி வளாகம் வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மீண்டும் பள்ளி திறக்கப்படும் வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva