1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nalini parole 10th extended by TN Govt

10 வது முறையாக நளினிக்கு பரோல் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

Nalini
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஏற்கனவே 9 முறை பரோல் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 10வது முறையும் பரவல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய 6 தமிழர்களில் ஒருவர் நளினி என்பதும் இவர் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் என்பது தெரிந்ததே 
 
கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி இவருக்கு முதல் முறையாக பரோல் வழங்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் தொடர்ச்சியாக ஒன்பது முறை பரோல் நீட்டிக்கப்பட்டது
 
இந்த நிலையில் நளினியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
வேதாந்தா குழுமத்திற்கு ₹80000 கோடி மானியம் வழங்கியுள்ள பாஜக அரசு - அமைச்சர் மனோ தங்கராஜ்