1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Muthoot Gold Finance Plunder

முத்தூட் கோல்டு பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் நகைகள் கொள்ளை !

கர்நாடக மாநிலம்
கர்நாடக மாநிலம்  பெங்களூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 16 கோடி ரூபாய் மதிப்புகள் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம்  பெங்களூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் திங்கட்கிழமை காலையில் ஊழியர்கள் வந்து நிறுவனத்தை திறந்தபோது,  77 கிலோ தங்க நகைகள் திருட்டுக் போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
 
கட்டிடத்தில் பின்புறம் உள்ள கழிவறை சுவற்றை உடைத்து  உள்ளே நுழைந்த திருடர்கள், கேஸ் கட்டரை பயன்படுத்தி லாக்கரை உடைத்து, அதில் இருந்த 77 கிலோ நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

மேலும், அங்கு இருந்த நேபாளத்தை சேர்ந்த காவலாளியை ஒருவர்  காணவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து போலீஸார், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து  விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
sinoj kiyan
அடுத்த கட்டுரையில்
பேரணியில் கலந்து கொண்ட 84 வயது முதியவருக்கு மரியாதை செய்த முக ஸ்டாலின்!