1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. More than five hours rain in Chennai

சென்னையில் 5 மணி நேரம் கனமழை: பெரும்பாலான சாலைகள் முடங்கியது

chennai
சென்னையில் மாலை 6 மணி முதல் சுமார் ஐந்து மணி நேரமாக கனமழை கொட்டி தீர்ந்ததால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து முடங்கியது


 


சென்னை அண்ணாசாலை, ராயபுரம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வடபழனி 100 அடி ரோடு, கோயம்பேடு, புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் இரண்டு அடிக்கும் மேல் மழைநீர் சாலைகளில் இருப்பதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். மின்சார ரயில் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
வடகிழக்கு பருவமழை எதிரொலி; மீட்புப்பணிகள் தீவிரம்!