தொடர்புடைய செய்திகள்
- AI அறிவு இருந்தால் மட்டுமே வேலை.. ரூல்ஸை மாத்திய HCLTech.. லட்சக்கணக்கில் சம்பளம்...
- மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு கட்டாயம்: முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு
- அமோனியா வாசு கசிவு விபத்துக்கு முந்தைய திமுக அரசுதான் காரணம்: தேமுதிக குற்றச்சாட்டு
- எங்களுக்கு அரசு வேலை கொடுத்தால் லஞ்சம் வாங்காமல் வேலை செய்வோம்.. முதலமைச்சருக்கு இளைஞர் வைத்த கோரிக்கை
- சென்னையில் அடுத்தடுத்து பெண்கள், சிறுமிகள் மீது தாக்குதல்: 12 பேர் கைது, முதல்வர் விஜய் மௌனம் குறித்து ஸ்டாலின் கேள்வி!
வேலை முடிந்தாலும் வேலை செய்வது போல் நடிக்கும் Gen Z இளைஞர்கள்!.. ஆய்வில் கண்டுபிடிப்பு..
இப்போதுள்ள இளம் தலைமுறைகள் நல்ல அறிவாற்றலோடு இருக்கிறார்கள்.. அதேநேரம் உடல் ஆரோக்கியமும், ஒரிடத்தில் பணி செய்யும்போது அதற்கான கடமையுணர்ச்சியோ, நேர்மையோ இல்லாமல் இருக்கிறார்கள் என பரவலாக பேசப்படுகிறது.
குறிப்பாக முன்பிருந்தது போல ஊழியர்களிடம் கடமையுணர்ச்சி, பொறுப்புணர்ச்சி மற்றும் உண்மைத் தன்மை ஆகியவை இப்போதுள்ள Gen Z ஊழியர்களிடம் இல்லை என பல கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள் கூறுகிறார்கள். அதை நிரூபிப்பது போல தற்போது ஒரு உண்மை ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது..
80 சதவீத Gen Z ஊழியர்கள் வேலையை முடித்தாலும் வேலை செய்வது போல் நடிப்பதாக Sofware Finder என்கிற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. வேலையை முடித்த பின்னர் கம்ப்யூட்டர் மவுசை கிளிக் செய்து கொண்டே இருப்பது, மெசேஜ்களுக்கு தாமதாக பதில் அனுப்புவது, தேவையற்ற Tap-களை திறந்து வைப்பது, தனக்கு பிடித்த விஷயங்களை தேடுவது என பொழுது போக்குவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
வேலை செய்யாமல் இருக்கிறோம் என மேனேஜருக்கு தெரியக்கூடாது என்பதற்காகவும், வேலை முடிந்துவிட்டது என தெரிந்தால் மேலும் சில வேலைகளை கொடுத்துவிடுவார்கள் என்பதற்காகவும் அவர்கள் வேலை முடிந்தாலும் முடியாதது போலவே காட்டிக்கொள்கிறார்கள் என்பது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக முன்பிருந்தது போல ஊழியர்களிடம் கடமையுணர்ச்சி, பொறுப்புணர்ச்சி மற்றும் உண்மைத் தன்மை ஆகியவை இப்போதுள்ள Gen Z ஊழியர்களிடம் இல்லை என பல கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள் கூறுகிறார்கள். அதை நிரூபிப்பது போல தற்போது ஒரு உண்மை ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது..
80 சதவீத Gen Z ஊழியர்கள் வேலையை முடித்தாலும் வேலை செய்வது போல் நடிப்பதாக Sofware Finder என்கிற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. வேலையை முடித்த பின்னர் கம்ப்யூட்டர் மவுசை கிளிக் செய்து கொண்டே இருப்பது, மெசேஜ்களுக்கு தாமதாக பதில் அனுப்புவது, தேவையற்ற Tap-களை திறந்து வைப்பது, தனக்கு பிடித்த விஷயங்களை தேடுவது என பொழுது போக்குவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
