வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (21:19 IST)

இரு மாநில நல்லுறவுக்கு உகந்ததன்று: கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த முதல்வர் ஸ்டாலின்

சில ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் நடந்து வரும் நிலையில் தற்போது மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்தது
 
இதற்கு தமிழக அரசின் சார்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது மத்திய அரசின் அனுமதிக்கு பிறகு மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பது ஒருதலைபட்சமானது. இருமாநில நல்லுறவுக்கு உகந்தது அன்று. மத்திய அரசு இதனை அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எதிரான இத்திட்டத்தை கைவிட வேண்டும்’ என்றும் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: