1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (18:34 IST)

மேலும் 4 சிங்கங்களுக்கு கொரொனா...மக்கள் அதிர்ச்சி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 10 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் இரண்டு சிங்கங்கள் தொற்று பாதிப்பால் உயிரிழந்தன.

இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பூங்காவில் உள்ள மற்ற சிறுத்தை, புலி போன்ற விலங்குகளுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை அருகேயுள்ள வண்டலூர் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

4 சிங்கங்களுக்கு இந்தியாவில் வேகமாகப் பரவி  வரும் டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த சிங்கங்களை விரைவில் குணப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.