தொடர்புடைய செய்திகள்
- பேருந்தை நிறுத்தாததால் குதித்த மாணவி பலி! – ஓட்டுனர், நடத்துனர் கைது!
- சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா! – அதிர்ச்சியளிக்கும் நிலவரம்!
- குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! – முதல்வர் தொடங்கி வைத்தார்!
- தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா..?? – முதல்வர் தீவிர ஆலோசனை!
- ”அம்மா” பெயர் இருப்பதால் மூடிவிட்ட்டார்கள்! – எடப்பாடியார் கண்டனம்!
காரிலிருந்து இறங்கி மக்களுக்கு மாஸ்க் மாட்டிவிட்ட முதல்வர்! – சென்னையில் பரபரப்பு!
கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னையில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாஸ்க் அணிவித்தது வைரலாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் டெல்டா மற்றும் ஒமிக்ரான் தொற்றுகள் வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் மக்கள் பலர் மாஸ்க் அணியாமல் அலட்சியம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அண்ணா சாலையில் முதல்வர் காரில் சென்று கொண்டிருந்தபோது மக்கள் பலர் மாஸ்க் அணியாமல் சென்றுள்ளனர். இதை பார்த்ததும் காரை விட்டு இறங்கி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மாஸ்க் அணியாதவர்களுக்கு மாஸ்க் அணிவித்துள்ளார், தடுப்பூசி போடுமாறும், மாஸ்க் அணியுமாறும் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். இதனால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு நிலவியது.
