1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin inaugurate schemes for migrated Tamilians

எங்கே இருந்தாலும் இனத்தால், குணத்தால் தமிழர்கள் நாம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Tamilnadu
புலம்பெயர் தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து பேசியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

உலகம் முழுவதும் பல தேசங்களில் தமிழர்கள் பலர் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அயல் தேசத்தில் வசித்து வரும் புலம்பெயர் தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர் “இலங்கை தமிழர்களுக்கு அதிமுக அரசு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை. ஒரு அடையாளமாக தான் இலங்கை தமிழர் என்று குறிப்பிட்டேன். எங்கும் எந்த நாட்டிலும் இருந்தாலும் நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள். இனத்தால் நாகரீகத்தால் ஒன்றுபட்டவர்கள் தமிழர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
வீடுகளுக்கு சென்று தடுப்பூசி திட்டம் - புதுப்புது முயற்சியில் தமிழக அரசு!