தொடர்புடைய செய்திகள்
- ஓபிஎஸ் உட்பட 11 பேர்தான் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்; தினகரன் அணியினர் வாதம்
- பரபரப்பான சூழலில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
- தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
- 18 தொகுதிகள் காலி என அறிவிப்பு - மீண்டும் தேர்தல் நடைபெறுமா?
- ஜக்கையன் மீது ஏன் நடவடிக்கை இல்லை? விளக்கம் கொடுக்கும் எடப்பாடி அணியினர்!
ஸ்டாலின் தினகரன் காலில் விழுகிறார்; அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்திற்கு எப்படியாவது முதல்வராகிவிட வேண்டும் என ஸ்டாலின் தினகரன் காலில் விழுகிறார் என நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அதில் அவர் கூறியதாவது:-
சபாநாயகர் நடவடிக்கையை விமர்சிக்க கூடாது. சபாநாயகர் உத்தரவில் யாரும் தலையிட முடியாது. ஜெயலலிதா ஆசியுடன் நடைபெறும் ஆட்சியை கலைக்க ஸ்டாலினும் தினகரனும் இணைந்து கூட்டுச்சதி செய்கின்றனர்.
முதல்வராகிவிட வேண்டும் என்ற ஆசையில் ஸ்டாலின் தினகரன் காலில் விழுகிறார். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. ஆட்சி நன்றாக நடைபெறுகிறது என்றார். மேலும் தமிழகத்திற்கு தேவையான நிதியை பெறவே டெல்லி வந்துள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றார்.
அடுத்த கட்டுரையில்
