தொடர்புடைய செய்திகள்
- கரூர் விவகார!ம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் திமுக!..
- தவெக ஆட்சி கவிழ வாய்ப்பே இல்லை.. மு.க.ஸ்டாலினுக்கு பி. சண்முகம் கண்டனம்!
- திமுக மறுசீரமைப்பு குழு அமைப்பு.. 10 பேர் கொண்ட குழுவில் இருப்பவர்கள் யார் யார்?
- எதனால் தோல்வி?.. நிர்வாகிகள் மீது நடவடிக்கை!.. சாட்டையை சுழற்றும் முக ஸ்டாலின்!..
- உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தல் எல்லாம் அடுத்தடுத்து வரும்: ஸ்டாலின் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கிண்டல்..
ஆணவம் அழிவிற்கு வழி!.. அனிதா ராதாகிருஷ்ணன் கைதை கண்டித்த ஸ்டாலின்!...
முதல்வர் விஜயை மிகவும் அவதூறாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்துள்ளது Take Diversion அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத தூயசக்தி ஆட்சி, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரை பேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து, விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர். ஆணவம் அழிவிற்கு வழி என பதிவிட்டிருக்கிறார்.
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்துள்ளது Take Diversion அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரை பேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து, விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர். ஆணவம் அழிவிற்கு வழி என பதிவிட்டிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
