1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 மே 2021 (11:07 IST)

தொடர்ந்து அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று! – அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் அமைச்சர் மதிவேந்தன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட வாரியாக அமைச்சர்களை பொறுப்பாளர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

இந்நிலையில் திமுக அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அமைச்சர் சிவசங்கரனுக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.