1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2024 (09:06 IST)

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு.. தீர்ப்பு தேதியை அறிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்..!

அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு தேதி வெளியாகி உள்ள நிலையில் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஐ பெரியசாமி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார்.
 
இதனையடுத்து அமைச்சர் ஐ பெரியசாமி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை என்று கூறி கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் ஐ பெரியசாமிக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில் இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் வரும் 26 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran