1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 5 அக்டோபர் 2022 (17:33 IST)

பள்ளிகளுக்கு அக்டோபர் 9வரை விடுமுறை நீட்டிப்பு: அதிரடி அறிவிப்பு!

Schools
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஆயுதபூஜை விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மெட்ரிக் பள்ளிகளுக்கு 9ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் மெட்ரிக் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி தான் பள்ளி என்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு 9ஆம் தேதி வரை விடுமுறை என்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இன்று விடுமுறை நிறைவுபெறும் நிலையில் நாளை முதல் பள்ளிக்கு விடுமுறை என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்புசாமி தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கூடுதலாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva