ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (18:41 IST)

மகப்பேறு உதவித்தொகை ரூ6,000 லிருந்து ரூ18,000 ஆக உயர்வு: அமைச்சர் அறிவிப்பு

money
கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை ரூ6,000 லிருந்து ரூ18,000 ஆக உயர்த்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்  அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
மேலும் விபத்தில் சிக்கிய கட்டுமான தொழிலாளர்களுக்கான உதவித்தொகை ஒரு லட்சத்தில் இருந்து ரூ2 லட்சமாக உயர்வு எனவும் இன்று சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு செய்துள்ளார்.
 
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களின் இந்த அறிவிப்பை அடுத்து கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்கள் தங்களது நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளனர்.