1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (18:43 IST)

டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை: அதிரடி உத்தரவு

aiims
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் உள்பட யாருக்கும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடத்த அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டெல்லி எய்ம்ஸ் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடத்த என்றும் அது மட்டுமின்றி ஒலிபெருக்கிகள் மூலம் ஒலி எழுப்பும் தடை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த அறிவிப்புக்கு தொழிலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.