வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

4 மணி நேரம் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடத்தும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்!

4 மணி நேரம் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடத்தும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்!
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது/ இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு இன்னும் எட்டவில்லை 
 
திமுக தரப்பில் இருந்து ஆறு தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறியதாகவும் ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 தொகுதிகள் இதுவரை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கூட்டம் சென்னை தி நகரில் கடந்த 4 மணி நேரமாக நடந்து வருகிறது
 
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணிகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த கூட்டத்தில் 4 மணி நேரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. கடைசியாக 7 தொகுதிகள் வரை திமுகவிடம் கேட்டுப் பெறுவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்