வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 7 மார்ச் 2021 (10:10 IST)

திமுக கூட்டணியில்…காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு....

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்

பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக நீண்டநாட்களாக இழுபறி நீடித்துவந்த நிலையில், தற்போது சென்னை அறிவாலயத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் திமுக 25 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளது. இதுகுறித்த ஒப்பந்தத்தில் காங்., தலைவர் கே.எஸ். அழகிரி கையெழுத்திட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, திமுவுடனான கூட்டணி மகிழ்ச்சியும் எழுச்சியும் ஏற்படுத்தியுள்ளது. மதச்சார்பிண்மை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.