தொடர்புடைய செய்திகள்
- வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க முடியாது! – உயர்நீதிமன்றம் மறுப்பு!
- அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை! – கமல்ஹாசன் ட்வீட்!
- விலையை குறைக்க முடியலை.. இதுல இலவச கேஸ் சிலிண்டரா? – டிடிவி தினகரன் கேள்வி!
- நாங்கதான் அறிவிச்சோம்.. இல்ல நாங்கதான் முதல்ல..! – வாக்குறுதிகள் குறித்து சோசியல் மீடியாவில் மோதல்!
- தங்கம் விலை மீண்டும் சரிவு; இன்றைய நிலவரம் என்ன?
திடீர்னு தேர்தல் வரும்னு நினைக்கல.. தேர்தலில் போட்டியில்லை! – மன்சூர் அலிகான் வருத்தம்!
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த மன்சூர் அலிகான் அக்கட்சியிலிருந்து விலகி ”தமிழ் தேசிய புலிகள் கட்சி” என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதிய கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான் நடப்பு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கட்சி தொடங்கிய நிலையில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டதால் குறுகிய நேரத்தில் கட்சியை பதிவு செய்ய இயலவில்லை என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இதனால் நடப்பு தேர்தலில் அவரது கட்சி போட்டியிட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
