தொடர்புடைய செய்திகள்
- அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை! – கமல்ஹாசன் ட்வீட்!
- விலையை குறைக்க முடியலை.. இதுல இலவச கேஸ் சிலிண்டரா? – டிடிவி தினகரன் கேள்வி!
- நாங்கதான் அறிவிச்சோம்.. இல்ல நாங்கதான் முதல்ல..! – வாக்குறுதிகள் குறித்து சோசியல் மீடியாவில் மோதல்!
- தங்கம் விலை மீண்டும் சரிவு; இன்றைய நிலவரம் என்ன?
- கோவையில் குடும்பங்களை குறிவைத்து பரவும் கொரோனா? – அதிகாரிகள் விளக்கம்!
வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க முடியாது! – உயர்நீதிமன்றம் மறுப்பு!
வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்காலிகமானது என்றும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு விரிவான மசோதா நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் அரசின் இந்த உள்ஒதுக்கீடுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்நாட்டு மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்தது. அதில் சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்காமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் ஓபிசி பிரிவினரில் 22 சாதியை சேர்ந்தவர்களுக்கு வெறும் 2.5% மட்டுமே இட ஒதுக்கீடு கிடைக்கும் என்றும், அரசியல் லாபத்துக்காக அரசு இதுபோன்ற உள்ஒதுக்கீடுகளை அறிவிப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு நிறைவேற்றிய வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
